பரமார்த்த குரு கதைகள்
Rs.360.00
1680 – ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டில் பிறந்து, ‘தம் முப்பதாம் வயதில் இந்தியாவுக்கு வந்து ஏறக்குறைய முப்பத்தேழு ஆண்டுகள் சமயப் பணியாற்றியவர் வீரமாமுனிவர். பல நூல்களைத் தமிழில் படைத்துள்ள அவர் பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவைக் கதையையும் எழுதினார் என்பார்கள்.
சிலர், இந்தக் கதை சுப்ரதீபக் கவிராயர் என்ற சிறந்த தமிழ்ப் புலவரால் எழுதப் பெற்றது என்பர். வீரமாமுனிவர் கவிராயருக்குப் பொருள் உதவி புரிந்து, பரமார்த்த குரு கதையினையும் வேறு பல நூல்களையும் எழுதுவித்துத் தம் பெயரால் வெளியிட்டுக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.
இது யாரால் எழுதப் பெற்றது என்பதில் குழப்பம் இருந்தாலும், இது நகைச்சுவை நிறைந்த சிறந்த கதை என்பதில் யாருக்கும் குழப்பம் இருக்க முடியாது. இதனைப் படித்தால் சிரிக்காதவர்களும் கூடச் சிரிப்பார்கள். இந்தக் கதையின் முக்கிய நோக்கமே சிரிக்க வைப்பதுதான்!
- Author : தராசன்
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 112
Additional information
| Weight | 95 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |





