சிந்து சமவெளி சவால்
Rs.1,410.00 Original price was: Rs.1,410.00.Rs.1,269.00Current price is: Rs.1,269.00.

மர்மமும், புதிரும் நிறைந்த இந்த வரலாற்றில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகளும், இணைக்கப்படாத பல புள்ளிகளும் உள்ளன. ருத்ரா மிகச் சுலபமாகப் பண்டைய இரகசியங்களைக் கண்டுபிடித்ததுடன், மர்மத்தை உடைத்து, புதிரை விடுவித்து, இணைக்கப்படாத புள்ளிகளையும் சேர்த்து அழகிய கோலமாக்குகிறான். அலெக்ஸாண்டர் மற்றும் சாணக்கியர் காலத்தில், இரண்டாம் அவதாரத்தில் ( ஜனனம் இரண்டு ), ஒன்பது அடையாளம் தெரியாத வீரர்களின் படைத் தலைவனான ருத்ரா, தனது ஆற்றல் மற்றும் நுண்ணறிவு மூலம் நமது சீரிய வரலாற்றில் புதைந்து கிடக்கும் பல உண்மைகளை வெளிக் கொணர்ந்து பல புதிர்களுக்கு விடை காண்கிறான்.
- Author :
- Publisher :
- No. of Pages :
or pay only Rs. 423.00 now with
Description
வரலாறு என்பது ஓர் இருள் காடு. நமக்குத் தெரிந்த ஒவ்வொரு உண்மைச் செய்திக்கும் பின்னால் அறிந்துகொள்ளமுடியாத ஓராயிரம் மர்மங்கள் புதையுண்டு கிடக்கின்றன. அந்த மர்மங்களைப் புரிந்துகொள்ள ஒரே வழி. புனைவை நாடுவதுதான். இந்தியா அதிசயங்களின் பூமி என்று சொல்லப்படுவது உண்மையா? கிரேக்கத்தில் இருந்து அலெக்சாண்டர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தது ஏன்? உலகால் வெல்லமுடியாத மாவீரரருக்கு இந்தியாவில் நடந்தது என்ன? அவர் இறந்தது ஏன்? எளிய பின்னணியைச் சேர்ந்த சந்திரகுப்த மௌரியர் இந்தியாவின் முதல் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பியது எப்படி? அவருக்கு உதவியவர்கள் யார்? ‘விதியின் சிறையில் மாவீரன்’ நாவலைத் தொடர்ந்து வெளிவரும் இந்த இரண்டாவது கதை ருத்ராவின் இரண்டாவது அவதாரமாக விரிவடைகிறது. தனது அசாதாரணமான துப்பறியும் திறனால் பெருமைமிகு பாரதப் பண்பாட்டின் அடியாழத்திலுள்ள அதிசயங்களையெல்லாம் கண்டறிந்து வெளிப்படுத்துகிறான் ருத்ரா, சரித்திர நாவல் உங்களுக்குப் பிடிக்குமென்றால் இந்த அபூர்வமான கதை உங்களுக்குதான்.
Additional information
| Weight | 190 g |
|---|---|
| Dimensions | 21.6 × 14 cm |





