உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்
Rs.1,300.00 Original price was: Rs.1,300.00.Rs.980.00Current price is: Rs.980.00.
பிரபல ‘தன்முனைப்பாளர்’ டாக்டர் ஜி . பிரான்சிஸ் சேவியரின் சுயமுன்னேற்ற பகுப்புகள் எப்போதுமே நிரம்பி வழியும். இங்கே, தான் பயணம் சென்ற நாடுகள், படித்த புத்தகங்களின் மூலம் பெற்ற அனுபவங்களை கதைகளாக எழுதி இருக்கிறார் டாக்டர் ஜி . பிரான்சிஸ் சேவியர்.
உரையாடல் வடிவிலான இந்தக் கதைகளின் முடிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வாசகர்கள் விடையளிக்க வேண்டும். இந்தப் புத்தகம் ஆசிரியர்கள், பேச்சாளர்கள், மதபோதகர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் மிக பிடித்தமானது. சிடுமூஞ்சிகள் மற்றும் எதிர்மறை உள்ளம் படைத்தவர்கள் இதற்கு விதிவிலக்கு. இதிலுள்ள கதைகளும் , பொன்மொழிகளும் மனதுக்கு உயிர்ப்பூட்டுவதோடு, இறுதி வரையிலும் தடையில்லா அக மகிழ்வை வாரி வழங்குகிறது.
டாக்டர் ஜி.பிரான்சிஸ் சேவியர் இரண்டு முதுகலைப் பட்டங்களுடன், படிப்பில் தங்கப்பதக்கமும் பெற்றவர். இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி கல்வி நிலையங்களில் விரிவுரையாளர், உதவிப் பேராசிரியர், துணை முதல்வர். முதல்வர் என்று பல்வேறு நிலைகளில் பணியாற்றி இருக்கிறார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள ஆசிய கான்ஃபெடரேஷன் ஆஃப் கிரெடிட் யூனியன்ஸ் (ஏ.சி.சி.யூ) என்னும் சர்வதேச அமைப்பில் நிதி ஆலோசகராக இருந்துள்ளார். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, கென்யா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை குறித்த பயிலரங்குகள் நடத்தியுள்ளார். மட்டுமல்லாமல் பல்வேறு தலைப்புகளில் 15 – க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இவர் எழுதி இருக்கிறார்.
-பதிப்பகத்தார்
- Author : ஜி.பிரான்சிஸ் சேவியர்
- Publisher : Jaico Publication
- No. of Pages : 216






Reviews
There are no reviews yet.