கில்மார்டன் மாளிகையின் மர்மங்கள்
Rs.1,120.00
லண்டனுக்கு துணிவாய் வீரதீர சாகசங்கள் தேடி வரும் ஆனேவுக்கு அப்படியோர் உச்சகட்ட அனுபவம் விமரிசையாய் காத்திருக்கிறது. ரயிலடிக்கு ரயிலேறப் போனவள், ப்ளாட்பாரத்தின் நுனியில் நின்றிருந்த ஆசாமி தவறிப் போய் மின்சாரத் தண்டவாளத்துக்குள் விழுந்து பொறி பறக்க மரணித்து விடுவதைப் பார்க்கிறாள்.
இது எதேச்சையாய் நிகழ்ந்த விபத்து கிடையாது என்பது அவளுக்குப் பூரணமாய் தெரியும். தவறி விழும்போது அவன் கண்கள் எதையோ பார்த்து விட்டதால் அடைந்த திகிலைக் கண்ட ஒரே ஆசாமியான ஆனேவுக்கு இது தெரியும்.
அந்த ‘எதுவோ’ – அது எது? அல்லது யார்?
ஒரு பாவமும் அறியாத அந்த ஆசாமி பரிதாபமாய் இறக்க, அப்போது யாருமற்றிருந்த ரயிலடியில் அவன் கண்டது தான் எதை? மிகப் பிரம்மாண்டமான, திகைப்புகளும் திருப்பங்களும் ஏராளமாய் நிறைந்த, திருப்தியளித்து மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கதையிது.
- Author : அகதா கிறிஸ்டி
- Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
- No. of Pages : 347






Reviews
There are no reviews yet.