புதிய வாழ்க்கையின் திறவுகோல்
Rs.1,200.00
வாழ்க்கை என்பது கிரகிக்கப்பட்ட விடைகளைக் கேட்பதில்லை. ஒவ்வொரு நாளும், வாழ்க்கை அதன் கேள்விகளை மாற்றிக் கொண்டிருக்கிறது. நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஒத்திகை பார்த்த பதில்களோடு இருக்கிறோம். வாழ்க்கைக்கு கிரகிக்கப்பட்ட பதில்கள் தேவையில்லை, வாழ்க்கைக்குத் தேவை சிந்தனையுள்ள உணர்வு ஏதாவது கேள்வி எழுந்தால், அது அந்த உணர்வில் பிரதிபலிக்கும், அது உணர்வுக்கு ஒரு சவால் விடும், பிறகு விடை வரும். யோசிப்பதினால், விடை தன்னால் வரும், ஆனால் நம்பிக்கையால், பதில் என்பது கற்றுக்கொண்டது, கிரகித்துக் கொண்டது. கிரகிக்கப்பட்ட விடைகளை தன் மனதில் வைத்திருப்பவர் வாழ்க்கையோடு இசைந்து போக முடியாது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் முன்னே நகர்ந்து செல்கிறது. வாழ்க்கையின் கங்கை நிற்பதில்லை, அது உன்னுடைய கிரகிக்கப்பட்ட பதில்களுக்காக இல்லை, ஒவ்வொரு நாளும் புதிது. அது புதிய கேள்விகளை எழுப்புகிறது. நீங்கள் உங்கள் புத்தகங்களைத் திறந்து விடைகளைப் பார்ப்பதற்கு முன்பு, நீங்கள் நிமிர்ந்து பார்த்தால் உங்கள் வாழ்க்கை நகர்ந்து போய் அது புதிய கேள்விகளை எழுப்பியிருக்கும். நீங்கள் எப்போதும் பின்தங்கியே இருக்கிறீர்கள். அதனால் உங்கள் சிந்தனையைத் தட்டி எழுப்புங்கள். அதனால் முதல் திறவு கோல் என்பது உங்கள் சிந்தனையின் சக்தியை தட்டி எழுப்புவதுதான்.
-ஓஷோ
- Author : ஓஷோ
- Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
- No. of Pages : 224
Additional information
| Weight | 220 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |





