அன்னை தெரேசா
Rs.510.00
அஜயன் பாலா
- Author :
- Publisher :
- No. of Pages :
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Description
அன்னை தெரசா பள்ளிக்கூடத்துக்குக் குழந்தைகளை அனுப்பச் சொன்னார் அன்னை. மறுநாள் ஐந்து குழந்தைகள் அவருக்காகத் காத்திருந்தனர். அந்தக் குழந்தைகளைக் கண்டதும், சட்டென அன்னைக்கு ஒரு குழப்பம்… இவர்களை எந்தப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப் போகிறோம் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கே அடுத்தவர் கைகளை எதிர்பார்க்கும் நிலை ஆனாலும், தெரசா கலங்கவில்லை…
ஒருநாள் அன்னையைப் பக்கத்தில் இருந்த வீட்டார் சுப நிகழ்ச்சிக்கு அழைத்தனர். அன்னையின் கையில் சிறிய பை ஒன்று இருந்தது. அன்னை தனக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு பகுதியைத் தனியாக எடுத்து அந்தப் பைக்குள் சேகரித்தார். அப்போது பலருடைய இலைகளில் உணவுகள் மீந்திருப்பதைக் கண்டதும், அவருக்குச் சட்டென ஒரு யோசனை உதித்தது உடனடியாகத் தனது சகோதரிகளில் ஒருவரிடம் ஒரு பெரிய பை ஒன்றை எடுத்து வரச் சொன்னார். அதற்குள் இலைகள் குப்பைத் தொட்டிக்குச் சென்றன. அன்னை கவலை கொள்ளவில்லை. நேராக குப்பைத் தொட்டிக்கே பையுடன் விரைந்தார்…





