நியூட்டனின் மூன்றாம் விதி
Rs.480.00
மனிதனுக்கு சிறகுகள் இல்லை என்ற குறையைத் தீர்க்கவே கவிதை. எல்லா மனிதரும் சகல மனிதரோடும் ரத்த சம்பந்தமான உறவை உண்டாக்கிக்கொள்ள முடியாததை ஈடு செய்யவே கவிதை. ஓர் அளவு தாண்டி ஆண், பெண் உட்பட பிரபஞ்சப் பொருட்கள் எதுவும் அழகாயில்லை என்று எல்லாம் தாண்டிய அழகுக்காக உண்டானது கவிதை. மழைக்காலம் முழுதும் குளித்தும், வசந்தம் முழுதும் தளிர்த்தும், பூத்தும், காய்த்தும் ஒரு தாவரமாக வாழமுடியாத அபாக்கியத்தினின்றும் தப்பிக்க கவிதை.
இந்த நூலை வாசித்தேன். நாம் வாழும் கிராமங்கள் ஊடேயும், தெருக்கள் ஊடேயும், வீடுகளுக்குள்ளும் புகுந்து, யதார்த்தமான வாழ்க்கையை அழைத்துவந்து அதன் சாரத்தையும் விசாரத்தையும் கைநிறைய அள்ளிக் கொட்டிவிட்டுப் போகிறது. புன்னகைக்கவும் துயரப்படவும் ஆழ்ந்துபோகவும் ஏராளம் உள்ளன இந்தக் கவிதைகளில.
அன்புடன் ,
-கந்தர்வன்
- Author : நா.முத்துக்குமார்
- Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
- No. of Pages : 62
Additional information
| Weight | 65 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |





