பட்டத்து யானை
Rs.2,500.00 Original price was: Rs.2,500.00.Rs.2,150.00Current price is: Rs.2,150.00.
–கடலிலிருந்து ஒரு துளி–
மல்லாந்து கிடந்த பிணங்கள் மிகவும் சொற்பம். எல்லாமே குப்புற, மண்ணைக் கவ்வியே கிடந்தன!
சித்திரங்குடி மயிலப்பனின் தியாகப் படையை, துரோகப் படைகள் தோற்கடித்து விரட்டிய இடமல்லவா… குண்டாறும் கோட்டையும்! அந்த யுத்தத்தின்போதுகூட, உயிர்விட்டும் பிடிபட்டும். தலை அறுபட்டும் செத்தவர்கள் போக… தப்பிப் பிழைத்தவர்கள் பலர். ஆனால், இன்று… ஓடுவது. ஒளிவது, தப்பிப் பிழைப்பது… என எதற்கும் இடமின்றி, பரிபூரண உயிர்நீக்கம் ஆனது.
நாலாயிரம் வீரர்களைப் பறிகொடுத்த மயிலப்பன், குண்டாற்றுக் காடுகளுக்குள் மறைந்து ஓடும்போது துடித்தானே… அந்தத் துடிப்பு, இன்று அடங்கியது.
மயிலப்பனின் படை கொட்டிய ரத்தத்தை, கோட்டையும் குண்டாறும் குடிக்கவில்லை… பூசிக்கொண்டு வெகுகாலம் காத்திருந்தன. ‘எவனாவது ஒரு மாவீரனை இந்த மண். பெற்றெடுக்கும்; அவன் அடக்குவான் நம் தாகத்தை! ‘என பொறுமை காத்தன, பழி தீர்த்தது, ரணசிங்கத்தின் கருஞ்சேனை!
- Author : வேல ராமமூர்த்தி
- Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
- No. of Pages : 376






Reviews
There are no reviews yet.