கனவு மெய்ப்படும்
Rs.460.00 Original price was: Rs.460.00.Rs.420.00Current price is: Rs.420.00.
பகவத் கீதையை, மிக எளிமையாக, பூர்வாங்கத் தகுதிகள் ஏதும் அற்றவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவதே இந்நூலின் நோக்கம். சமயத்தன்மை கடந்து, வாழ்க்கைக்குக் கீதை எப்படிப் பயன்படுகிறது என்கிற விளக்கம் இப்புத்தகத்தின் தனித் தன்மை. ஆதிசங்கரரும், ராமானுஜரும், மத்துவரும் உரை எழுதிய நூலுக்கு இப்படி ஒரு விளக்கம் எழுதுவது அதிகப் பிரசங்கித்தனம் என்கிற உணர்வு என்னுள் வந்தது. ஆனால் அவர்கள் உரையின் நோக்கம் வேறு. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்கிற தத்வ பிடிவாதம், அதற்கு மூலநூலை வளைக்கும் ப்ரயோகங்கள் அவர்கள் உரைகளின் மீது குற்றம் சொல்வோருக்கு வசதியாகப் போய் விட்டது. எனக்கு அப்படி எந்த உள்நோக்கமும் இல்லாதது நிம்மதி தருகிறது.
களமாக பிரச்சனை, போராட்டம், குழப்பம், இவை நிறைந்த வாழ்க்கையில் உலகமே போர்க் ஆகி விட்டது . மனிதன் மீது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யுத்தம் திணிக்கப்பட்டு விட்டது. எனவே போருக்குத் தயாராகிற அர்ஜூன அவசியம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது. இதை இந்நூல் புரிய வைக்கும் என்று நம்புகிறேன்.
கர்ம யோகமே பிரபஞ்சத்திற்குக் கீதையின் முக்கிய செய்தி. அதனால் கர்ம யோகம் பற்றியே இந்தச் சின்ன புத்தகம் பேசுகிறது. முன்பின் கீதை அறிமுகம் இல்லாதவரும். சமஸ்கிருத ஞானம் இம்மியும் இல்லாதவரும் கீதையைப் புரிந்து கொள்ளும்படியே இதை எழுதி இருக்கிறேன்.
அன்புடன் சுகி சிவம்
- Author : சுகி.சிவம்
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 112
or pay only Rs. 140.00 now with
Description
கர்ம யோகத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஆசார்ய வினோபாபாவே எழுதிய கீதைப் பேருரைகளைப் படிக்கலாம். வெறும் மேதாவிலாசத்தை விருத்தி செய்ய விரும்புகிற வறட்டு அறிவாளிகளுக்கு இந்தப் புத்தகம் இம்மியும் பயன்படாது. ஆனால் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறை உடைய ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக இந்நூல் உபயோகப்படும். ஒவ்வொரு அத்தியாயமும் படிக்கட்டு மாதிரி. படிக்கப் படிக்க படிக் கட்டுகளாக உங்களை உயர்த்தும் என்பது என் தீர்மானம்.
அன்புடன்
-சுகி சிவம்
Additional information
| Weight | 90 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |






Reviews
There are no reviews yet.