தாமஸ் ஆல்வா எடிசன்
Rs.518.00
உலகில் பல நூறு விஞ்ஞானிகள் தோன்றி மறைந்து விட்டார்கள். ஒவ்வொருவரும் மனித குலத்துக்கு மாபெரும் சேவை புரிந்துவிட்டே புகழ் பெற்றுள்ளனர். அவர்களது அறிவு, முயற்சி, உழைப்பு, கண்டு பிடிப்பு ஆகியவற்றின் பலனை உலகோர் அனைவரும் தங்கள் நல்வாழ்விற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆயினும், உலகம் முழுவதும் உள்ளோர்க்கு, சிறுவர் களுக்குக் கூட, உலகின் எந்த நாட்டு எந்த மூலையில் உள்ள பள்ளிப் பிள்ளைக்கும் தெரிந்த ஒரு விஞ்ஞானியின் பெயர், தாமஸ் ஆல்வா எடிசன்! அவரே இன்று நாம் பயன்படுத்தும் மின்சார பல்பைக் கண்டுபிடித்தவர்.
உலகோர் அனைவரையும் வசீகரித்து அவர்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட கலையான சினிமா’வைக் கண்டுபிடித்தவர் அவரே. நீராவி எஞ்சினில் ஓடும் ரயிலை, மின்சாரம் மூலம் இயக்கியவரும் அவர்தாம். எனவே மின்சார ரயிலுக்கு அவரே முன்னோடி.
- Author : ஆர்.சி.சம்பத்
- Publisher : கற்பகம் புத்தகாலயம்
- No. of Pages : 104






Reviews
There are no reviews yet.